- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- கலைஞர் நூற்றாண்டு பூங்கா, சென்னை
- பொங்கல்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.1.2026) சென்னை, கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, பொங்கல் திருநாளையொட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்திவரும் தமிழ்நாடு அரசிற்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த 5 ஆண்டுகளில் – வேளாண்மைத் துறைக்காக ஐந்து தனி நிதி நிலை அறிக்கை அளித்து 1.94 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 54,701 ஏக்கர் தரிசு நிலங்கள் சாகுபடிக்கு உகந்ததாக மாற்றம், ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண்மை, பசுந்தாள் உரமிடுதல், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்ற செயல்பாடுகளுக்கு ரூ.320 கோடி நிதி ஒதுக்கீடு, குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்திற்கு ரூ. 481 கோடி ஒதுக்கீடு, விவசாய நிலங்களுக்கு புதிதாக 1.82 இலட்சம் மின் இணைப்புகள், பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் 37 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6,049 கோடி இழப்பீடு;
பருவமழை காலங்களில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட 33.84 இலட்சம் ஏக்கரில் ஏற்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர் சேதத்திற்கு ரூ.1,924 கோடியில் 25 இலட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் 25 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.19 கோடி செலவில் காய்கறி, பழச்செடி மற்றும் பயறுவகை விதைத்தொகுப்புகள், நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 4.9 இலட்சம் எக்டரில், 3,915 கோடி ரூபாய் மானியத்தில் 5 இலட்சம் விவசாயிகளுக்கு நுண்ணீர்ப்பாசனம் அமைப்புகள், தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.766 கோடி நிதி மானியம், 213 ஒழுங்குமுறை விற்பனைகூடங்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் இணைப்பு மூலம் மொத்தம் ரூ.8,388 கோடி மதிப்பில் 29 இலட்சம் மெ.டன் வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை, ரூ.7.53 கோடியில் 14 புதிய உழவர் சந்தைகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் இயந்திர வாடகை மையங்கள் நிறுவிட ரூ. 587 கோடி மானியம்;
சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் ரூ. 80 கோடி மானியம், 8,371 கி.மீ. சி மற்றும் டி கால்வாய் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது, முதலமைச்சரின் உழவர்நல சேவை மையத்தின் மூலம் ரூ.91 கோடி வங்கி கடன் உதவிகள் போன்ற பல்வேறு திட்டங்களை வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காக சீரிய முறையில் செயல்படுத்திவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, பல்வேறு விவசாய அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் நிருவாகிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினையும், பொங்கல் நல்வாழ்த்துகளையும் இச்சந்திப்பின்போது தெரிவித்துக்கொண்டனர்.
அப்போது, முதலமைச்சர் அவர்களும், விவசாய சங்க நிருவாகிகளுக்கு தன்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இச்சந்திப்பில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் வெ. தனபாலன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் மு.சேரன், தென்னிந்திய நதிகள் இயக்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் எம்.வெங்கடேசன், காணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் பிரகாஷ், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்க தலைவர் கே.எம்.வெங்கடேசன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் இராஜேந்திரன், நந்தன் கால்வாய் இணைப்பு சங்க நிருவாகி அறவாழி, தமிழ்நாடு நதிகள் பாதுகாப்பு இயக்க நிருவாகி ஆனந்தன், தமிழ்நாடு சிறு விவசாயிகள் முன்னேற்றச் சங்க நிருவாகி மணி, இயற்கை உழவர் உற்பத்தியாளர் சங்க நிருவாகி சீத்தாராமன், தஞ்சை தமிழக விவசாயிகள் சங்க நிருவாகி சுகுமாறன், காவிரி தாய் சங்க தலைவர் கவிஞர் முருகையன்,
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன், சென்னை விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், தமிழக விவசாயிகள் சங்க நிருவாகி புருஷோத்தமன், நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிருவாகி வசந்தபிரியா, விவசாயிகள் முன்னேற்ற சங்க நிருவாகி ராமு சக்திவேல், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் த.முத்துகுமார், புல்லம்பாடி வாய்க்கால் பாதுகாப்பு சங்க தலைவர் எஸ்.ஆர்.கண்ணன், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க நிருவாகி கோவிந்தராஜ், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து, ஏரி ஆற்றுப் பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் விஸ்வநாதன், காவிரி விளைபொருள் உற்பத்தியாளர் நலச் சங்க நிருவாகி இராஜாராமன், திருச்சி மாவட்ட விவசாயிகள் நலச் சங்க நிருவாகி தீட்சிதர் பாலு,
விவசாயிகள் சங்க தலைவர் யோகநாதன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நலச் சங்க தலைவர் சுப்பிரமணியன், திருவண்ணாமலை விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் தாமஸ், வேளாண் வணிக தொழில் கூட்டமைப்பு நிருவாகி எழிலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் ஜீவகுமார், சிவசாமி தமிழக விவசாயிகள் சங்க நிருவாகி சுபாஸ், எக்ஸ்னோரோ தலைவர் செந்தூர்பாரி, கஞ்சமலை விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் தேசிங்குராஜா, செங்கல்பட்டு மகளிர் விவசாயிகள் சங்க நிருவாகி குமுதா, திருவள்ளூர் விவசாயிகள் நலச் சங்க நிருவாகி திரு. சீனிவாசன், விவசாய தொழிலாளர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் நலன் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு சங்க நிருவாகி திரு.மணி, மயிலை விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் சிவக் குமார்,
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நிருவாகி பழனியப்பன், மகளிர் தற்பூசணி விவசாயிகள் சங்க நிருவாகி குணசுந்தரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அக்ரி திரு.கா பசுமைவளவன், அ.சாந்தி, திரு.கரிகாலன், ப.முருகானந்தம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிருவாகிகள் – இராஜா, மேகராஜ், திரு.முத்துகிருஷ்ணன், தளபதி, இப்ராஹிம், இராஜபாலன், தெய்வசிகாமணி, திருமதி பவித்ரா சுரேஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிருவாகிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர் மரு. நா.எழிலன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
