கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு வகை தாவரங்களை அகற்ற பிறப்பித்த அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. கொடைக்கானல் பகுதியில் மரங்களை வெட்டி விற்பனை செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டு வகை மரத்தை அடையாளம் காண என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு அறிக்கை தர நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
