கிரிஸ்பி தட்டை

தேவையான பொருட்கள்

இடியாப்ப மாவு (அ) பச்சரிசி மாவு 2 கப்
ஊற வைத்த க.பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
உளுந்து மாவு 4 டீ ஸ்பூன்
தனி மிளகாய் தூள் 1 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன்
வெண்ணெய் (அ) உருக்கிய நெய் 1 டீ ஸ்பூன்
உப்பு ருசிக்கு
நறுக்கிய கறிவேப்பிலை 2 ஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேறும் கடாயில் 2 டேபிள் ஸ்பூன் முழு உளுந்தை கருகாமல் நன்கு சிவக்க வறுத்து ஆறினதும், மிக்ஸியில் மைய அரைக்கவும்.பிறகு அரிசிமாவையும் நன்கு வறுத்து ஆறினதும் பெரிய பௌலில் போடவும். க.பருப்பை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.அரிசி மாவுடன், 4 ஸ்பூன் உளுந்து மாவு, தனி மி.தூள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்,வெண்ணெய், உப்பு போட்டு நன்கு கலந்து தண்ணீரை தெளித்து பிசைந்ததும், ஊறின க.பருப்பை தண்ணீரை வடித்துவிட்டு சேர்த்து கலக்கவும்.எண்ணெய் மிதமான சூட்டில் வைத்து காய்ந்ததும், பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, மாவை மெல்லியதாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*கிரிஸ்பி தட்டை* தயார். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.