டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. நேற்று த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாரிடம் 9 மணி நேரம் சிபிஐ விசாரணை நடைபெற்றது. த.வெ.க. நிர்வாகிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி சிபிஐ விசாரணை நடத்திய நிலையில் இன்றும் விசாரணை நடைபெறுகிறது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக விசாரணை நடந்துவருகிறது.
