டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை தொடங்கியது. சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக தவெக நிர்வாகிகள் ஆஜராகி உள்ளனர். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ஈரோடு மாவட்டச் செயலர் மதியழகன் உள்ளிட்டோர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்கள்.
