சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் 2,56,793 பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்து 4,741 பேர் படிவம் 7 விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணி மூலம் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது .
