திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சர்வ தரிசனம் டோக்கன் வழங்குவது நிறுத்தம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

 

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சர்வ தரிசனம் டோக்கன் வழங்குவது நிறுத்தபடும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சர்வ தரிசன டோக்கன் ஜனவரி 8ம் தேதி முதல் வழங்கப்படும். சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி ஆன்லைனில் பதிந்து டோக்கன் பெற்ற பக்தர்கள் மட்டுமே டிச.30ம் தேதி முதல் ஜன.1ம் தேதி வரை இலவச தரிசனத்துக்கு அனுமதி. டோக்கன் வழங்கப்பட்டுள்ள 1.80 லட்சம் பக்தர்கள் மட்டுமே இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர்

Related Stories: