திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பெற்றோர் இருவரையும் இழந்து தவிக்கும் 3 குழந்தைகள் வைத்த கோரிக்கையை ஏற்று அவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும், வீடு கட்டித் தருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பெற்றோரை இழந்த 3 குழந்தைகளிடமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் பேசி ஆறுதல் கூறினார்.
