×

கலசப்பாக்கம், அரக்கோணம், சோளிங்கர் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு

சென்னை: கலசப்பாக்கம், அரக்கோணம், சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் நேற்று கலசப்பாக்கம், அரக்கோணம், சோளிங்கர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை முதல்வர் தனித்தனியே சந்தித்து பேசினார். சந்திப்பின்போது தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பேரவை தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதங்களே உள்ளதால் ேதர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை வீடுகள்தோறும் சென்று விளக்க வேண்டும். அப்போது திமுக அரசு குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள். மேலும் அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை கேட்க வேண்டும். ஏதாவது பிரச்னை என்றால் அதனை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். மேலும் கடந்த தேர்தலை விட வரும் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அதற்காக இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால், அவர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Tags : Chief Minister ,MK Stalin ,Kalasappakkam ,Arakkonam ,Sholingar ,Chennai ,DMK ,
× RELATED நயினார் அதிமுகவின் ‘பி’ டீம்: செங்கோட்டையன் பேட்டி