- எம்.பி.பி.எஸ்
- பிடிஎஸ்
- சென்னை
- தமிழ்நாடு அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
- ஓமந்தூரார் அரசு மருத்துவ மருத்துவமனை
சென்னை: தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 20 ஆயிரம் இதய இடையீட்டு சிகிச்சைகள் மற்றும் ரூ.500 ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்துள்ளது. அதற்கான பாராட்டு விழா ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 50 காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியதன் அடிப்படையில் ஒன்றிய அரசு அந்த 50 இடங்களையும் நிரப்புமாறு தெரிவித்தது. தற்போது 50 இடங்களையும் நிரப்புமாறு உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் இன்று முதல் 23ம் தேதி வரை காலியான எம்பிபிஎஸ் 23 இடங்களும், பிடிஎஸ் 27 இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு விரைவில் துணை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். செவிலியர்களின் கோரிக்கைகள் காலி பணியிடங்கள் வரும்போது படிப்படியாக நிரப்பப்படும். ஒப்பந்த செவிலியர்கள் யாரையும் இந்த அரசு கைவிடாது. கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 3,783 ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்த செவிலியர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களை நிரந்தரம் செய்ய படிப்படியாக காலி பணியிடங்கள் வரும்போது நிரப்பப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
