மதுரை: திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சை வழக்கில் தனி நீதிபதி விசாரணைக்கு தடையில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க தடையில்லை. தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. தீபத் தூண் சர்ச்சை தொடர்பான வழக்கு விசாரணை நாளையும் தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
