பணி நியமன கடிதம் கொடுத்த போது பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றிய பீகார் முதல்வர்: சர்ச்சை வெடித்ததால் பரபரப்பு

பாட்னா: பீகார் மாநிலத்தில் நேற்று 1000 ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு பணி நியமன ஆணையை வழங்கினார்கள். அப்போது 10 பேருக்கு நிதிஷ்குமார் கையால் நேரடியாக பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. அவரிடம் பெண் டாக்டர் நுஸ்ரத் பர்வீன் என்பவரும் பணி நியமன ஆணை பெற்றார். அவர் தன் முகத்தை ஹிஜாபால் மூடியபடி அரசு ஆணையை பெற்ற போது, முதல்வர் நிதிஷ்குமார் முகம் சுளித்து, ‘இது என்ன?’ என்று கேட்டபடி குனிந்து அவரது முகத்தின் இருந்த ஹிஜாபை அகற்ற இழுத்தார்.

இதனால் அந்த பெண் டாக்டர் பதற்றம் அடைந்தார். உடனே அங்கு இருந்த ஒரு அதிகாரி அவசரமாக டாக்டரை அழைத்துச் சென்றார். நி அருகில் நின்றுகொண்டிருந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, நிதிஷ்குமாரின் சட்டையின் கையைப் பிடித்து இழுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து,’ இதுதான் முதல்வரின் தற்போதைய மனநிலை’ என்று விமர்சனம் செய்துள்ளன.

Related Stories: