இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக போதைப்பொருள் வழக்குகள் பதிவு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2023-ஆம் ஆண்டில் கேரளாவில் அதிகபட்சமாக 30,697 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், யூனியன் பிரதேசங்களில் ஜம்மு காஷ்மீர் 2,232 வழக்குகளுடன் முதலிடம் வகிக்கிறது.

மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்;
மாநிலங்களில், கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் வழக்குகள் கடுமையாக அதிகரித்துள்ளன. அதனைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆ ண்டில் மகாராஷ்டிராவில் 15,610 வழக்குகளும், பஞ்சாபில் 11,589 வழக்குகளும், தமிழ்நாட்டில் 10,126 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 9,387 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

யூனியன் பிரதேசங்கள் பிரிவில், ஜம்மு காஷ்மீரில் அதிகபட்சமாக 2,232 வழக்குகளும், அதைத் தொடர்ந்து டெல்லியில் 1,325 வழக்குகளும், புதுச்சேரியில் 148 வழக்குகளும் பதிவாகியுள்ளன. தரவுகளின்படி, 2023-ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் 1,16,051 வழக்குகளும், யூனியன் பிரதேசங்களில் 3,959 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories: