வார இறுதிநாளில் மாற்றம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது

 

சென்னை: தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் ரூ.96,000க்கும் விற்றது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.196க்கும், கிலோவுக்கு 4 ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.

இந்நிலையில் வார இறுதிநாளான நேற்று தங்கம் விலை உயர்ந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,040க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.96,320க்கும் விற்றது. இதேபோல வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.199க்கும், கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

 

Related Stories: