வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை எரித்து கொல்ல முயற்சி
தொழிலாளி திடீர் சாவு: என்எல்சி நிர்வாக அலுவலகம் முற்றுகை
திருமண நிகழ்வுக்கு வந்தபோது சோகம் ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி
வாகன தகுதி சான்றிதழ் பெற ₹5,500 லஞ்சம் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர், புரோக்கர் கைது-₹2.5 லட்சம் சிக்கியது
விழுப்புரம் அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 9 பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம்
குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு இரு தரப்பினர் பயங்கர மோதல் மினி லாரி, 2 பைக்குகள் உடைப்பு
மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கு 1,250 லிட்டர் மெத்தனாலை ₹60 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளனர்
நன்கொடை கேட்பது போல் நடித்து செல்போன் திருட்டு
சிறுமியிடம் சில்மிஷம் செய்தவருக்கு போலீஸ் வலை
சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது
மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் செயின் பறிப்பு
சிறந்த கல்வியை தருவதே ஆசிரியர் பணியின் நோக்கம்
கடலூர் முதுநகர் அருகே பரிதாபம் கார் மீது லாரி மோதி சிறுவன் பலி
திண்டிவனம் அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை, ₹1.5லட்சம் திருட்டு
குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பா?
திண்டிவனம் அருகே பறவைகளை வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது
கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு புதுச்சேரி, மே 22: கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை வேதனையுடன் தெரிவித்தார். ஜி20 தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட ஜி20 நாடுகளில் நேற்று கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. நீடித்த, நிலையான கடல்சார் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கடல்சார் மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டறியவும், இதுதொடர்பாக ஜி20 நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அனைத்து கடல்சார் மாநிலங்களிலும் கடற்கரைத் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை மற்றும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது:நிலத்திலிருந்து கழிவுகளை அப்புறப்படுத்த கடலில் கொட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்களின் உணவுக்காக மாறி பின்பு நாமே மீன்களை உண்கிறோம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன. தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே சுகாதார கேட்டினால் ஏற்படும் நோய்களை தடுத்ததன் மூலம் கிட்டத்தட்ட ரூ.60 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சார்ந்த மாநிலம். எனவே, புதுச்சேரியில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிச்சயமாக கொண்டு வர வேண்டும். கடலை சுத்தப்படுத்துவதன் மூலமாக நமது குடலும் சுத்தப்படுத்தப்படுகிறது. நிச்சயமாக இது இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கவர்னர் உறுதிமொழி வாசிக்க, அதனை அனைவரும் ஏற்றனர். தொடர்ந்து, தேசிய மாணவர் படை மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் பேரணியை கவர்னர் தொடங்கி வைத்தார். மேலும், சுற்றுச்சூழல் குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். சபாநாயகர் செல்வம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மீன்பிடி தடைகால நிவாரணத்தை முன்கூட்டியே வழங்க கோரிக்கை
அரசு கல்லூரிகளில் சேர்க்கை கால நீட்டிப்பு செய்ய வலியுறுத்தல்
முஷ்ணம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை உதவி இயக்குனர் ஆய்வு