பரந்தூர்: பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு எதிரான 13 கிராம மக்களின் போராட்டம் 200வது நாளை எட்டியுள்ளது. 200வது நாள் போராட்டத்தையொட்டி எஸ்பி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராம மக்களின் போராட்டத்துக்கு த.வா.க. தலைவர் வேல்முருகன் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவிக்கிறார்.