காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பேரணி நடத்தி வருகின்றனர். ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள், விவசாய அமைப்பினர் கருப்புக்கொடியுடன் பேரணியாக செல்ல தொடங்கினர். பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கோரிக்கை மனு தர ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்கின்றனர்.