×

லோடு ஆட்டோவில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை ஆட்டோ நகரில், முக்கியம்மன்கோயில் அருகே நேற்று ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் வாலாஜா வட்ட வழங்கல் அலுவலர் ராஜ லட்சுமி, ராணிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், தனி வருவாய் ஆய்வாளர் ஆர்.பாஸ்கரன் ஆகியோருடன் திடீர் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 1,085 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லோடு ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி வாலாஜா நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ காவல் ஆய்வாளரிடம்(குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை) ஒப்படைக்கப்பட்டது.

Tags : Lodu Auto , 1 ton of ration rice smuggled in a loaded auto seized
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...