நெல்லை: நெல்லை அடைமிதிப்பான்குளம் கல்குவாரிக்கு சொந்தமான அலுவலகத்தின் பூட்டை உடைத்து சோதனை நடைபெற்று வருகிறது. கல்குவாரி அலுவலகத்தின் பூட்டை உடைத்து நாங்குநேரி ஏ.எஸ்.பி. ராஜா சதுர்வேதி தலைமையில் ஆவணங்களை கைப்பற்றி போலீஸ் சோதனை நடத்தி வருகிறது. கல்குவாரி அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.