சென்னை: ஆவடி, திருச்சி, சேலம் உள்பட பல்வேறு மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, திருவேற்காடு, திருநின்றவூர், திருத்தணி ஆகிய நகராட்சிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை ஓபிஎஸ், இபிஎஸ் 2வது பட்டியலை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு, அனைத்திந்திய அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக, மாவட்டம் வாரியாக கீழ் கண்டவர்கள், கீழ்காணும் வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். அதன்படி சென்னை புறநகர் மாவட்டங்களில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆவடி மாநகராட்சி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு, திருநின்றவூர், திருத்தணி நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதவிர சேலம் மாநகராட்சி, திருச்சி மாநகராட்சி, மதுரை மாநகராட்சி, சிவகாசி மாநகராட்சி, தூத்துக்குடி மாநகராட்சி, பெரியகுளம் நகராட்சி, தேனி-அல்லி, கூடலூர், போடிநாயக்கனூர், கம்பம், சின்னமனூர், எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், நரசிங்கபுரம், தாரமங்கலம், இடங்கணசாலை, செய்யார், வந்தவாசி, ஆரணி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி, துறையூர், முசிறி, துவாக்குடி, மணப்பாறை, லால்குடி, ஜெயங்கொண்டம், அரியலூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை, மேலூர், சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், வில்லிபுத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, கோவில்பட்டி, திருச்செந்தூர் , குளச்சல் ஆகிய நகராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.