சென்னை: அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் தேர்வு முறை குளறுபடி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் அமைச்சர் பொன்முடி, செயலர் அபூர்வா, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.