சென்னை :கவிஞர் வைரமுத்து தனது திருமண மண்டபத்தை கொரோனா வார்டாக மாற்றிக்கொள்ள வழங்குவதாக தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்
“திருமண மண்டபங்களைத்
தற்காலிக மருத்துவ மனைகளாக
மாற்றுவதற்குத்
தமிழக அரசு முடிவெடுத்தால்,
முதல் மண்டபமாக
எங்கள் ‘பொன்மணி மாளிகை’
திருமண மண்டபத்தை
மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்.
மணம் நிகழ்வதைவிட
குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?” என்று குறிப்பிட்டுள்ளார்.