×

பூந்தமல்லி கிளைச்சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்

பூந்தமல்லி: மதுரையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக நடராஜன்(31), முருகன்(எ)லோடு முருகன்(40) ஆகியோர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி தனி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பூந்தமல்லி தனி கிளை சிறை ஜெயிலர் ரமேஷ் சிறைக்குள் திடீர் சோதனை செய்தார். அப்போது நடராஜன், முருகன் ஆகியோர் அறைகளில் இருந்து 2 செல்போன்கள், 2 சிம் கார்டுகள், பேட்டரி, சார்ஜர் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மற்ற சிறை கைதிகளிடம் செல்போன் உள்ளதா, அவர்களுக்கு செல்போன் எப்படி வந்தது என்பது குறித்து விசாரிக்கின்றனர். …

The post பூந்தமல்லி கிளைச்சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Poontamalli Branch Jail ,Poontamalli ,Natarajan ,Murugan ,Lodu Murugan ,Madurai ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ