சென்னை: நான் யார் தெரியுமா படத்தை இயக்கிய இயக்குனர் வி. எஸ். பாலமுருகன் எழுதி இயக்கி வரும் புதிய படத்திற்கு கின்னஸ் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் இ.ஜே. நவ்சாத் ஒளிப்பதிவு செய்கிறார். படம் குறித்து இயக்குனர் வி.எஸ். பாலமுருகன் கூறுகையில், ‘‘இது முழுநீள பொழுதுபோக்கு படம். ஆர்.கே. வரதராஜ் இதுவரை வில்லத்தனமான கதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் வெறும் வில்லத்தனம் மட்டுமின்றி அதில் காமெடியும் கலந்து நடித்து அசத்தியிருக்கிறார்.
கதைக்கு திருப்பம் தரும் வேடம் அவருக்கு. இப்படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு திருப்பு முனையாக இருக்கும்.. ஏற்கனவே ஹரிதாஸ், வட்டக்கானல் போன்ற சில படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்த வரதராஜ்..இப்படத்தில் மக்களை கவரும் காமெடி வில்லனாக மட்டுமின்றி கொடூரமான வில்லத்தனம் கலந்த வில்லனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். இப்படத்தின் கதாநாயகன் ராஜ் வர்மா’’ என்றார். இந்த படத்தை ஜரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் இ.ஜே.நவ்சாத், இயக்குனர் பாலமுருகன் இணைந்து தயாரிக்கின்றனர்.
