×

கிரைம் திரில்லர் கதை ‘தி ஐ 3’

ஒரு மலைக்கிராமத்தில் அதிர வைக்கும் வகையில் சில சம்பவங்கள் நடக்கிறது. இளம் பெண்களும், காதலர்களும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இந்நிலையில், தொழிலதிபர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால், அதற்கான ஆதாரம் இல்லாததால் மாற்றுவழியை கையாளுகின்றனர். அது என்ன வழி? கொலையாளிகள் யார் என்று கண்டுபிடிக்கும் கிரைம் திரில்லர் படமாக ‘தி ஐ 3’ உருவாகியுள்ளது. ஸ்ரீஸ்வர்ணலட்சுமி மூவிஸ் சார்பில் கொடைக்கானல் ஆர்.ராஜேந்திரன் தயாரித்துள்ளார். குரு பிரகாஷ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

ரோஷன், சந்தியா, ரமேஷ், மாலி, சுஜி, ஸ்ரீ, சாய் கோபி, லோகேஷ் நடித்துள்ளனர். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜீவா வர்ஷினி இசை அமைத்துள்ளார். காதல்மதி பாடல்கள் எழுத, சி.எஸ்.பிரேம் குமார் எடிட்டிங் செய்துள்ளார். விமல் நடனப் பயற்சி அளிக்க, ரவிராஜ் சண்டைக் காட்சி அமைத்துள்ளார். முத்துக்குமார் வசனம் எழுதியுள்ளார். செல்வ சத்யா, ரஞ்சிதா இணை தயாரிப்பு செய்துள்ளனர். மேகமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல், சின்னமனூர், சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

Tags : Srisvarnalaxmi ,Godaikanal R. ,Rajendran ,Guru Prakash ,
× RELATED மேக்கப்பை புறக்கணிக்கும் சாரா அர்ஜூன்