×

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 29ம் தேதி அமைச்சரவை கூட்டம்: புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் குறித்து முக்கிய முடிவு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 29ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 29ம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த நிலையில் புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது, அனுமதி அளிப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக முன்பு தகவல் வெளியானது. இந்நிலையில், ஒரு நாளுக்கு முன்பாக 29ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….

The post சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 29ம் தேதி அமைச்சரவை கூட்டம்: புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் குறித்து முக்கிய முடிவு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary of ,Chennai ,Chief Secretariat ,G.K. ,Cabinet ,Stalin ,Paranthur ,Chief Secretariat G.K. ,nadu ,Chief Secretariat of ,Chief Secretary ,B.C. G.K. ,Bharandur ,New Airport ,
× RELATED தமிழ்நாட்டில் போதைப்பொருளை...