×

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு உள்கர்நாடகா முதல் தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை மறுநாள் (மார்ச் 25) வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,North Ulkarnataka ,South Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5...