×
Saravana Stores

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூர்- விழுப்புரம் இடையே நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

பொதுமக்களின் வசதிக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும் சென்னை பூங்கா – தாம்பரம் – செங்கல்பட்டு இடையேயும், சென்னை கடற்கரை- ஆவடி- திருவள்ளூர் இடையேயும், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையேயும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai ,Chennai Egmore-Villupuram ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலை...