×
Saravana Stores

இரும்பு ஸ்டாண்ட் திருடிய 2 பேர் கைது

தர்மபுரி, அக். 25: தர்மபுரி ராஜாபேட்டை மசூதி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (42). இவர் இண்டூர் அருகே சாலப்பள்ளம் பகுதியில் கிரானைட் கம்பெனி வைத்துள்ளார். இதனிடையே, கம்பெனியில் இருந்த கிரானைட் கற்களை நிறுத்த பயன்படுத்தும் 2 இரும்பு ஸ்டாண்டுகளை, மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அதியமான்கோட்டை போலீசில், ரமேஷ்குமார் புகார் செய்தார். இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரும்பு ஸ்டாண்டை திருடிய நல்லம்பள்ளி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முத்து (22), சஞ்சய் (19) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இரும்பு ஸ்டாண்ட் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Ramesh Kumar ,Mosque Street, Rajapet, Dharmapuri ,Chalappallam ,Indore ,
× RELATED தர்மபுரி அரசு மருத்துவமனை முன்...