×
Saravana Stores

வீடு முன்பு நின்ற பெண்ணை தரதரவென 100 அடி வரை சாலையில் இழுத்து சென்று நகை பறிப்பு

*மதுரையில் சிசிடிவி காட்சிகள் வைரல்

மதுரை : வீட்டு முன்பு நின்றிருந்த பெண்ணை, டூவீலரில் நகையை பறித்தபடியே சுமார் 100 அடி வரை இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகே பந்தடி 9வது தெரு உள்ளது. இத்தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா(45). கேட்டரிங் அலுவலகத்தில் ஊழியராக உள்ளார். இவர் கணவருடன் பொருட்கள் வாங்கி விட்டு பைக்கில் வந்து இறங்கினார். வீட்டு வாசல் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, பின் தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த 2 பேர், மஞ்சுளா அணிந்திருந்த 3 பவுன் நகையை பறிக்க முயற்சித்தனர். ஆனால் நகையை பறிக்க முடியாமல் போனது. நகையை கையில் பிடித்தபடி மஞ்சுளா சாலையில் விழுந்தார்.

நகையை பறிக்க இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை தரதரவென சுமார் 100 அடி வரை இழுத்துச் சென்றனர். இதனை பயன்படுத்தி மஞ்சுளா அணிந்திருந்ததில் ஒன்றரை பவுன் நகையை பறித்துக்கொண்டு பைக்கில் இருவரும் தப்பிச் சென்றனர். இக்காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவானது.இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாக விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

திறந்து கிடக்கும் வீட்டில் புகுந்து திருடும் சிறுவர்கள்

மற்ெறாரு சம்பவத்தில், மதுரை பந்தடி 7வது தெருவில் இரு சிறுவர்கள் நடந்து செல்கின்றனர். இருவரும் திடீரென திறந்த நிலையில் உள்ள ஒருவரது வீட்டிற்குள் திடீரென புகுந்து விடுகின்றனர். அந்த வீட்டு முன் அறையில் பையில் இருந்த ரூ.3 ஆயிரத்தை திருடி விட்டு தப்பிச் செல்கின்றனர். இதுதொடர்பான காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வீடு முன்பு நின்ற பெண்ணை தரதரவென 100 அடி வரை சாலையில் இழுத்து சென்று நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Bandadi ,Madurai Thirumalai ,Nayakar Mahal ,
× RELATED தொடரும் உயிரிழப்புகள்… மதுரையில்...