×

சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் சட்டவிரோத காவலில் இல்லை: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை சட்ட விரோதமாக கைது செய்து அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் என்பவர் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.பி.பாலாஜி, ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜரானார். அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, ‘‘8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் சிறையில் அடைக்க மறுத்ததால் 8 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்கள் ஜாமீன் உத்தரவாதத்தை செலுத்திவருகிறார்கள். 8 பேரும் சட்டவிரோத காவலில் இல்லை’’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தொழிலாளர்கள் அமைதியாக போராட்டம் நடத்த உரிய பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஒருவரும் காவலில் வைக்கப்படவில்லை என்று கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவரது வாதம் பதிவு செய்யப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் வேறு உத்தரவு எதையும் பிறப்பிக்க தேவையில்லை. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் சட்டவிரோத காவலில் இல்லை: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Samsung ,ICourt ,CHENNAI ,Samsung India Electronics Limited ,Chungwarchatra ,Sriperumbudur ,CITU ,Dinakaran ,
× RELATED வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை: சாம்சங் மூத்த அதிகாரி தகவல்