×

கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: 2020ல் கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ED தரப்பில் ஆஜராக வேண்டிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக இயலாத நிலையில் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட கேரள அரசு தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல், வழக்கை எத்தனை முறை ஒத்திவைக்க கோருவீர்கள் என கேள்வி எழுப்பினார். தங்க கடத்தல் வழக்கை ED தீவிரமானதாக கருதவில்லை என்றே தோன்றுகிறது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

 

The post கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Kerala ,Delhi ,Karnataka State Enforcement Department ,Dinakaran ,
× RELATED நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை