×

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 2 படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்பகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த 15 மீனவர்களை கைது செய்து விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் தொடர்ச்சியாக இலங்கை கடற்படை கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனால் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதார பாதிக்கப்பட்டு வருவதால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது! appeared first on Dinakaran.

Tags : Rameshwaram ,Sri Lanka Navy ,Sri Lankan Navy ,Tamil Nadu ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!