×

சிறப்பு கவனம் செலுத்தி குறித்த காலத்தில் தமிழ்நாடு அரசின் முத்திரை திட்ட பணிகளை முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்


சென்னை: சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில் திருச்சி மண்டலப் பொதுப்பணித் துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட பணிகள், பொதுப்பணித்துறையின் அறிவிப்புகள் மற்றும் இதர துறையின் அறிவிப்புகளில் நிலுவை இருந்தால் உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும். எந்த கட்டுமானப் பணியானாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் முத்திரைத் திட்டப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, குறித்த காலத்தில் கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். குறிப்பாக, இப் பணிகளில் பசுமைக் கட்டிட வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை திருச்சி மண்டலத்தின் மூலம் நடைபெற்று வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிட மதிப்பீடு உடனடியாக சமர்ப்பித்து, பணிகள் தொடங்கிட வேண்டும். ₹45.50 கோடியில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம், ₹34 கோடியில் கடலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் ஆகிய குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, முதன்மைத் தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, தலைமைக் கட்டடக் கலைஞர் இளவேண்மாள், திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் செந்தில், சிறப்பு பணி அலுவலர் விஸ்வநாத், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சிறப்பு கவனம் செலுத்தி குறித்த காலத்தில் தமிழ்நாடு அரசின் முத்திரை திட்ட பணிகளை முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Minister ,VELU ,Chennai ,Works ,Chief Minister ,Tamil Nadu Government ,
× RELATED கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை;...