×

களக்காட்டில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

 

களக்காடு, செப். 10: களக்காட்டில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (30). இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி சிறுமி ஒருவருடன் திருமணம் நடந்ததாகத் தெரிகிறது. அதன் பிறகு கடந்த ஜூலை 17ம் தேதி அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே ஜெயப்பிரகாஷ் மனைவிக்கு பிரசவித்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர் சிறுமியாக இருப்பதை அறிந்து களக்காடு பிடிஓ விஜயராணிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இதுகுறித்து விசாரித்த பிடிஓ, சிறுமிக்கு திருமணத்தின் போது 17 வயதான நிலையில் இருந்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து களக்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் பிடிஓ விஜயராணி புகார் அளித்தார். அதன்பேரில் விசாரித்த அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை திருமணம் செய்த ஜெயப்பிராஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post களக்காட்டில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Tags : Boxo ,Kalakkad ,Kalakat ,Jayaprakash ,Nella District, Kalakadu ,
× RELATED களக்காட்டில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்