×

பிள்ளையாரை வழிபட கிடைக்கும் பலன்கள்

முழு முதற் கடவுளான பிள்ளையாரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். விக்னங்களை தீர்ப்பவர் ஆயிற்றே! உங்களது பிரச்னைகளை மனதார சொல்லி அவரிடம் முறையிட்டாலே உடனே தீர்த்து வைத்து விடுவார். எல்லோருக்கும் பிடித்தவரை எவ்வாறு வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

*மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் நற்பதவி கிடைக்கும்.
*புற்று மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் நல்ல லாபம் கிடைக்கும்.
*உப்பால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் எதிரிகள் அழிவார்கள்.
*கல்லால் அமைந்த விநாயகரை வழிபட்டால் சகல சௌபாக்யங்களும் கிடைக்கும்.
*மாவால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும்.
*வெள்ளெருக்கால் செய்த பிள்ளையாரை பூஜித்தால் செல்வம் பெருகும்.
*மஞ்சள் நூலால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் சகல காரியங்களும் நல்ல விதமாக முடியும்.
*வெல்லத்தால் செய்த பிள்ளையார் வாழ்வு வளம் பெறும்.
*பசுஞ்சாணியால் உருவாக்கப்பட்ட பிள்ளையாரை வணங்கினால் உடல் பிணிகள் நீங்கும்.
*அருகம்புல், தேங்காய் இவற்றால் பூஜித்தால் பெருஞ் செல்வமும், நீண்ட ஆயுளும் கிடைக்கும்.
*செந்தாமரை கொண்டு கணபதி ஹோமம் செய்து வணங்கினால் பெருஞ் செல்வம் சேரும்.
*கெட்டித் தயிரால் கணபதி ஹோமம் செய்ய வளம் பெருகும்.
*நீலோற்பவ மலரால் கணபதி ஹோமம் செய்ய அனைத்து சங்கடங்களும் தீரும்.
*வெல்லம், வாழைப்பழம், பாயசம், நெய் கலந்த தேங்காய் இவற்றால் ஹோமம் செய்தால் நாம் எண்ணிய காரியங்கள் உடனே நிறைவேறும்.
*நாயுருவி கொண்டு ஹோமம் செய்தால் கிரகங்களின் தீய தாக்கங்கள் விலகும்.

– மாலதி நாராயணன், சென்னை

The post பிள்ளையாரை வழிபட கிடைக்கும் பலன்கள் appeared first on Dinakaran.

Tags : God ,
× RELATED கும்ப ராசிக்காரர்களின் இல்லக் கனவை நனவாக்கும் இறைவன்