×

ராமநாதபுரத்தில் மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டி

ராமநாதபுரம், அக். 7: ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான மாணவ மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடைபெற்றது. ராமநாதபுரம் விளையாட்டு அரங்கத்தில் ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவில் மாணவ மாணவிகளுக்கு தடகள போட்டிகள் நடைபெற்றது. கடந்த 4 ந் தேதி போட்டி துவங்கியது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று மாலை வரை போட்டிகள் நடந்தது. நேற்று நடந்த மாணவிகளுக்கான இறுதி தடகள போட்டியினை ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி மற்றும் ராமேஸ்வரம் நகர்மன்ற தலைவர் நாசர் கான் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதை நடந்தது. 3 நாட்கள் நடந்த போட்டியில் ராமநாதபுரம், கீழக்கரை, மண்டபம், திருவாடனை, பரமக்குடி, நயினார் கோயில், கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட 8 குறு வட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

நேற்று நடந்த தடகளம், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கோலூண்டி தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த தடகள போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்து வெற்றி பெருபவர்கள் மாநில அளவில் நடைபெறவிருக்கின்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

The post ராமநாதபுரத்தில் மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டி appeared first on Dinakaran.

Tags : Ramanathapura ,Ramanathapuram ,Ramanathapuram Revenue District ,Ramanathapuram Sports Stadium ,Dinakaraan ,
× RELATED ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப்...