×

மராட்டிய மாநிலம் தானேவில் 40 மாடி கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 7 பேர் பலி!!

மும்பை : மராட்டிய மாநிலம் தானேவில் லிப்ட் அறுந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். கட்டி முடிக்கப்பட்டுள்ள 40 மாடி கட்டிடம் ஒன்றில் தொழிலாளர்கள் நீர் புகாமல் காக்கும் பணிகளை மேற்கூரைகளில் மேற்கொண்டு வந்தனர். பணிகளை முடித்து விட்டு லிப்டில் கீழ் தளத்திற்கு அவர்கள் வந்து கொண்டு இருந்த போது, திடீரென லிப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதில் உள்ளே இருந்த தொழிலாளர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அந்த 2 பேரும் உயிரிழந்துவிட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து பற்றி அப்பகுதி முன்னாள் கவுன்சிலர் சஞ்சய் போயர் கூறுகையில், “கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்த சம்பவத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இதுவே உயிரிழப்புக்கு காரணமாகி உள்ளது. இது குறித்து லிப்ட் அமைத்து தரும் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

The post மராட்டிய மாநிலம் தானேவில் 40 மாடி கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 7 பேர் பலி!! appeared first on Dinakaran.

Tags : state ,Thane ,Mumbai ,Marathi ,Thaney ,
× RELATED மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக...