- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திரிதானி சுற்று
- சென்னை
- இரணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்
- முப்பத்தானி சுற்று
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. வெயில் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காலை முதல் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் திடீரென கருமேகம் சூழ்ந்தது அரக்கோணம், மங்கம்மா பேட்டை, சுவான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
அதே போல தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த இரு வாரங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாலை வரை வெப்பத்தின் தாக்கம் இருந்த நிலையில் இரவு 7 மணி அளவில் கனமழை பெய்தது. திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பதட்டூர்பேட்டையில் அரைமணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததில் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
The post தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் கனமழை: திருத்தணி சுற்று வட்டாரத்தில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.