×

அதிமுக எம்எல்ஏ மீது இறுதி குற்றப்பத்திரிகை

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மான்ராஜ். இவர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக மகளிர் அணியை சேர்ந்த ரீட்டா (42), திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். இதன் அடிப்படையில் எம்எல்ஏ மான்ராஜ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நேற்று இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து விரைவில் வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

The post அதிமுக எம்எல்ஏ மீது இறுதி குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Tags : MLA ,Thiruvillyputtur ,Virudhunagar District ,Thiruviliputtur Block ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...