- ரகுல் காண்ட்ஹி
- ஸ்ரீபெரும்புதூர்
- தமிழ்நாடு காங்கிரஸ்
- சென்னை
- ராகுல் காந்தி
- ஸ்ரீபெரும்புதூர்
- ராஜீவ் காந்தி
- நினைவு நாள்
- ராவுல் காந்தி
- டி.என் காங்கிரஸ்
சென்னை: ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (மே 21) ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த ராகுல் காந்தியின் பயணம் தவிர்க்கமுடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ராஜிவ்காந்தியின் 32ம் ஆண்டு நினைவு தினம் நாளை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் நடைபெறுகிற அஞ்சலி நிகழ்ச்சியில் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்க இருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் நாளை (21.5.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ராகுல் காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் ரத்து: தமிழக காங்கிரஸ் தகவல் appeared first on Dinakaran.