×

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கல்வி அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்: ராகுல்காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் நேற்று முன்தினம் நடந்த மாணவர்கள் குரல் பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தேர்வு வினாத்தாள் கசிவு புகாரை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட ரியா குமாரியின் தந்தை ராஜேஷ் குமாரை ராகுல்காந்தி மேடைக்கு அழைத்திருந்தார். அவரை பார்த்த அனைவரது கண்களிலும் கண்ணீர் வந்தது.

இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி, ‘‘இது ஒரு குடும்பத்தின் வலி மட்டுமல்ல. வினாத்தாள் கசிவு இதுபோன்ற பல குடும்பங்களிடம் இருந்து குழந்தைகளை பறித்துவிட்டது. ஒவ்வொரு பெயருக்கு பின்னாலும் ஒரு தாயும் தந்தையும் உள்ளனர். அவர்களுக்கு இனி ஒரு எதிர்காலம் என்பதே இல்லை. இந்த அமைப்பை அடியோடி மாற்றி அமைக்க வேண்டும். குழந்தைகள் மன அழுத்தத்திற்கு பதிலாக பாதுகாப்பை உணரும் வகையிலும், பெற்றோர்கள் கண்ணீருக்கு பதிலாக தங்கள் தியாகங்களுக்கான பலனை பெறும் வகையிலும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rakulkanti ,New Delhi ,Lok Sabha ,Rakul Gandhi ,Dehradun, Uttarakhand ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...