×

பெரம்பலூரில் அரிசி, உளுந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை உயர்வு..!!

பெரம்பலூர்: பெரம்பலூரில் அரிசி, உளுந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற உணவுப்பொருட்கள் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்தனர். அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது. 26 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் அரிசி, ரகத்துக்கு ஏற்ப ரூ.200 முதல் ரூ.400 வரை விலை ஏற்றம் கண்டுள்ளது. மேலும் 50 கிலோ எடை கொண்ட உளுந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.250 உயர்ந்துள்ளது.

Tags : Perambalur ,US ,Iran ,war.… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து