×

பஞ்சாப் அரசின் புதிய சட்டம் அனைத்து சீக்கிய அமைச்சர்களும் அகால் தக்த்தில் இன்று ஆஜர்

சண்டிகர்: பஞ்சாப் அரசு சீக்கியர்களின் புனித நூல் குரு கிரந்த் சாகிப்பை அவமதிக்கும் செயல்களுக்கு எதிராக புதிய சட்டத்தை நிறைவேற்றியது. ஜகத் ஜோட் ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் சத்கார் (திருத்தச்) சட்டம், 2026’ என்ற, நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் தங்களை கலந்தாலோசிக்காமல் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறி சீக்கியர்களின் உயர்ந்த மத அமைப்பான அகால் தக்த் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த சட்டம் தொடர்பாக அனைத்து சீக்கிய அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் தங்கள் கருத்துகளை 29ம் தேதி(இன்று) தெரிவிக்க வேண்டும் என அகால் தக்த் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அனைத்து சீக்கிய எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் இன்று அகால் தக்த் அலுவலகத்தில் ஆஜராகி சட்டம் தொடர்பான தங்கள் விளக்கத்தை அளிப்பார்கள் என முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.

Tags : Punjab government ,Akal Takht ,Chandigarh ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...