×

ஈரான் போர் நிறுத்தத்துக்கு பின் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த இந்திய கப்பல் ஜக் விக்ரம்

புதுடெல்லி: ஈரான் 2 வார போர் நிறுத்த அறிவிப்புக்கு பின் முதல் முறையாக இந்தியா கப்பல் ஜக் விக்ரம் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான்- இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் தொடங்கியது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை தொடர்ந்தனர். ஈரானும் பதிலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள அண்டை நாடுகள் மீது தாக்குதலை முன்னெடுத்தது.
இந்நிலையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வாரகால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்த தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புக்கு பின் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் எல்பிஜி ஏற்றிய கப்பலான ஜக் விக்ரம் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து பாரசீக வளைகுடாவில் இருந்து வெளியேறும் 9வது இந்திய கப்பல் ஜக் விக்ரம் ஆகும். அதே நேரத்தில் சுமார் 15 இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் இந்த பகுதியில் பயணத்திற்காண காத்திருக்கின்றன. ஜக் விக்ரம் சுமார் 26ஆயிரம் டன் எடைக்கும் அதிகமான சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட எரிவாயு ஏற்றிச்செல்லும் கப்பலாகும்.

Tags : Zag Vikram ,Strait of Hormuz ,Iran ,New Delhi ,India ,Vikram ,Israel ,United ,States ,United States ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...