- கண்ணமங்கலம்
- திருவேங்கடம்
- சரவணன்
- சின்ன பாலம்பாக்கம் கிராமம்
- சோழவரம் துணை மாவட்டம்
- வேலூர் மாவட்டம்
- நவீன்
- ஜோதிக்குமார்
- பெருமாள் கோயில் தெரு
கண்ணமங்கலம், ஏப்.6: வேலூர் மாவட்டம், சோழவரம் அஞ்சல், சின்ன பாலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் மகன் சரவணன் (27). இவரது உறவினர்கள் கண்ணமங்கலம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஜோதிகுமார் மகன் நவீன்(20), சின்ன பாலம்பாக்கம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன்.
இந்நிலையில் நேற்று மாலை சரவணன் தனது தந்தையின் டூவீலரில் சந்தவாசல் பகுதியில் உள்ள உறவினரை பார்க்கச் சென்றார். அப்போது அவரது பின்னால் நவீன், 17 வயது சிறுவன் அமர்ந்து சென்றனர். பின்னர் வீடு திரும்பினர். பாளைய ஏகாம்பர நல்லூர் கூட்ரோடு அருகே வந்துகொண்டிருந்த போது பைக்கும், வெள்ளூர் கொல்லை மேடு பகுதியை சேர்ந்த உதயபாஸ்கர்(42) ஓட்டி வந்த மினி வேனும் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் டூவீலரில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில், சரவணன், நவீன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வலது கை, வலது கால் எலும்பு முறிவுடன் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மினிவேனை பறிமுதல் செய்து, போக்குவரத்தை சீரமைத்தனர்.
