- திருத்தந்தை லியோ
- ஈஸ்டர்
- வத்திக்கான்
- போப் லியோ XIV
- பாப்பரசர்
- செயின்ட் பீட்டர் சதுக்கம்
- கிரிஸ்துவர்
- போப் பதினான்காம்…
வாடிகன்: புதிய போப் ஆண்டவராக கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட போப் 14ம் லியோ நேற்று ஈஸ்டர் தினத்தையொட்டி, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அங்கே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களிடையே உரையாற்றிய போப் 14ம் லியோ, “அநீதிகளாலும், பாகுபாடான சுயநலத்திலும், ஏழைகள் மீதான அடக்குமுறையிலும் ஔிந்திருக்கும் மரணத்தை எதிர்கொள்வதில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.
போரால் ஏற்படும் அநீதி, பூமியின் வளங்களை சுரண்டும் லாபவெறி மற்றும் பலவீனமானவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக குரல் தருவதும், நடவடிக்கை எடுப்பதும் அவசியம். வன்முறைகளாலும், போர்களாலும் பிளவுப்பட்டுள்ள சமூகத்தில் அமைதியும், ஒற்றுமையும் ஏற்பட வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.
