- பாஜக அரசு
- திருமங்கலை
- மதுரை
- திமுகா
- அமைச்சர்கள்
- மூர்த்தி
- ப. டி. கூட்டியிட்டார்
- ஆர். மதுரை
- வடக்கு
- வேட்பாளர் தளப
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
மதுரை: திமுக, கூட்டணி வேட்பாளர்கள் 9 பேருக்கு வாக்கு சேகரித்தார். அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆருக்கு ஆதரவு திரட்டினார். மதுரை வடக்கு வேட்பாளர் தளபதிக்கும் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். ‘தமிழ்நாட்டின் பண்பாடு தலைநகரம் மதுரை. ஆண்டு முழுக்க திருவிழாக்கள் நடக்கும் ஊர். எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் ஊர். தமிழ் இலக்கியத்தில் சிறப்பான இடத்தை பிடித்த ஊர். அன்பு, பண்பு, விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற, பாசமிக்க மனிதர்கள் வாழும் ஊர் நம் மதுரை.
மதுரையின் வளர்ச்சி என்றாலே திமுகதான். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பயன்கள். ஏறுதழுவுதல் அரங்கம், வேலுநாச்சியார் பாலம் அமைப்பு. மதுரை எய்ம்ஸ் வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. நாங்கள் அறிவித்த ஒன்றரை வருடத்தில் சென்னையில் கலைஞர் உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்தோம்.தமிழ்நாட்டின் மீதுள்ள வெறுப்பால் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட ஒன்றிய பாஜக அரசு மறுக்கிறது’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
மதுரையின் வளர்ச்சி என்றாலே திமுகதான். மதுரைக்கான வளர்ச்சியை முன்னெடுக்கும் மாடல்தான் திராவிட மாடல். என்.டி. ஏ. முன்வைப்பது வளர்ச்சி, மக்களை பிளவுப்படுத்தும் ஆரிய மாடல். வளர்ச்சியை கெடுக்கிற ஆரிய மாடல், மக்களை பிளவுப்படுத்துகிற ஆரிய மாடலை என்.டி.ஏ. முன்வைக்கிறது. மதுரையை மணிப்பூராக மாற்றத் துடிக்கிறது என்.டி.ஏ.வின் ஆரிய மாடல். தமிழ்நாட்டை வஞ்சிப்போரை தண்டித்து, தமிழ்நாட்டை வளர்ப்போருக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டின் டி.என்.ஏ.வை சிதைக்க முயற்சிக்கிறது என்.டி.ஏ.. மத நல்லிணக்கத்தை கெடுக்கிற ஆரிய மாடலை கொண்டுவர நினைக்கிறது என்.டி.ஏ. கூட்டணி. சொந்த மண், மக்களுக்கு துரோகம் இழைக்கும் கட்சியாக என்.டி.ஏ. உள்ளது. மதுரைக்கு ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று எய்ம்ஸ் அறிவித்தனர்; அதுவும் வரவில்லை. மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டி 4 தேர்தல்கள் வந்துவிட்டன; ஆனால் எய்ம்ஸ் வரவில்லை. மதுரை எய்ம்ஸ் வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது.
நாங்கள் அறிவித்த ஒன்றரை வருடத்தில் சென்னையில் கலைஞர் உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்தோம். பாஜகவினால் நம்மைப் போல் ஏன் வேகமாக செயல்பட முடியவில்லை?… ஏனென்றால் தமிழ்நாடு மீது பாஜகவுக்கு வெறுப்பு. தமிழ்நாட்டின் மீதுள்ள வெறுப்பால் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட ஒன்றிய பாஜக அரசு மறுக்கிறது. தமிழ்நாட்டின் மீதுள்ள வெறுப்பால் பாஜக அரசால் திட்டங்களை வேகமாக முடிக்க முடியவில்லை.
10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டை சீரழித்தது அதிமுக; அதற்கு துணைபோனது பாஜக. இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளோம். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுத்தது ஒன்றிய பாஜக அரசு. நாட்டிலேயே அதிக திட்டங்களை திராவிட மாடல் அரசுதான் செய்துள்ளது. தமிழ்நாட்டில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று பியூஷ் கோயல் கூறுகிறார்.
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் எந்த புரிதலுமின்றி தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி பேசியுள்ளார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் பற்றி பழனிசாமியிடம் பியூஷ் கோயல் கேட்க வேண்டும். தமிழ்நாடு திவாலாகிவிடும் என பியூஷ் கோயல் பேசியது Too Much. முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு தடவை சொன்னால் நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். தமிழ்நாடு அனைத்திலும் நம்பர் ஒன் ஆக இருப்பதால்தான் பாஜகவுக்கு வெறுப்பு” என பேசினார்.
