குவைத்: குவைத் அரசின் வளாகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குவைத் நாட்டின் பல்வேறு அமைச்சக அலுவலகங்கள் அடங்கிய அரசு வளாகத்தை ஈரான் தாக்கியதில் பெரும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கையாக அதில் பணிபுரியும் ஊழியர்கள் தற்காலிகமாக வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு அளித்துள்ளது.
