தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.ஆர்.கே.அப்பு போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொரப்பாடி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அரியூர் ரயில்வே கேட் மேம்பாலம் கிழக்கு மற்றும் மேற்கு பக்கவாட்டு வீதிகளில் வாக்கு சேகரித்த அவர் அப்படியே அருகில் உள்ள சேம்பர் பகுதிக்கு ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிக்க நுழைந்தார்.
அப்போது பதற்றத்துடன் ஓடி வந்த அதிமுக தொண்டர்கள், ‘அண்ணே, அண்ணே’ இது அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிண்ணே, அப்படியே திரும்பி போங்கண்ணே’ என்று கூக்குரலிட்டனர். அடடே அப்படியா என்றபடி அவரது வாகனம் மற்றும் பரிவாரங்களை திருப்பி அனுப்பினர். இதை பார்த்து அந்த பகுதி வாக்காளர்கள், தனது தொகுதியின் எல்லை எதுவரை என்பது தெரியாமலேயே இந்த தொகுதியில் ேவட்பாளர் 2வது தடவையாக போட்டியிடுகிறார். என்ன செய்ய? என்று தலையிலடித்துக் கொண்டனர்.
